சாந்தமிளிர் தூரன் கூட்டம்
தூரன் கூட்டத்தவர்கள். கொங்கதேச தொல்குடிகளுள் மிக முக்கியமானவர்கள். உத்தம குண நிபுண தூரர்,நாடுபுகழ் தூரர், நீதித் தூரர், சீர்கொண்ட தூரர், சாந்த மிளிர் தூரர் என்று இலக்கியங்களில் புகழப்படுகிறார்கள்.
ஆதியில் ஸ்ரீ கிருஷ்ணரின் துவாரகையில் இருந்து கங்கை சமவெளி சென்று பின்பு அங்கிருந்து கொங்கதேசம் வந்தவர்கள் என்று தூரன் அம்மானை நூல் குறிப்பிடுகிறது.
முன்பு சேரன் காலத்தில் கொங்கில் நாம் குடியமர்ந்த காலகட்டத்தில் வேட்டுவர் ஆதரவு பெற்ற பாண்டியர்களுக்கும் சேரனுக்கும் போர் மூண்டது. போரில் சேரன் மாந்தரஞ்சேரலுக்கு துணையாக வேளிர்கள் துணை நின்றோம். நம்மில் தூரர் மந்திரியாக இருந்து சேரனுக்கு துணை நின்று போர் நடத்தி வெற்றி தேடித் தந்தார். அந்த போரின் வெற்றிக்குப் பிறகே கொங்கில் வேளிர்கள் காலூன்றி நின்றோம்.
அந்த வகையில் கொங்கதேசத்தில் கொங்கு குடியானவர்கள் காலூன்றி பட்டக்காரர்களாகவும், சிற்றரசுகளாகவும் நிற்க அடித்தளம் அமைத்ததே மதியூகிகள் தூரன் கூட்டத்தினர்தான். மந்திரிகளாக மட்டுமின்றி பெரும்படையையும் கொடுத்துதவியுள்ளனர். இன்றுள்ள பட்டக்காரர்கள், முதல் பணக்காரர்கள் வரை அனைத்து கவுண்டர்கள் வாழ்வும், வளமும் தூரன் கூட்டத்தாரின் கொடை என்றால் மிகையல்ல. கொங்கு வேளிர் அனைவருமே நன்றிக்கடன் பட்டுளோம். கொங்கதேசாதிபதி சேரனின் நேரடி மந்திரி, படை கொடுத்தோர், போர் நடத்தியோர் என்னும் நோக்கில் காணும்போது கொங்கதேசத்தில் தூரன் கூட்டத்தினருக்கு உள்ள உரிமையும், அதிகாரமும் விளங்க வேண்டும்.
மீண்டும், கொங்கதேசம் பாண்டியர் ஆட்சிவசமானபோது "பாண்டியரையர்" (பாண்டியராயர்) என்ற பட்டம் தாங்கி ஆட்சி பொறுப்பு வகித்துள்ளனர். குமாரமங்கலம் சிவாலயமும் 'பாண்டீஸ்வரர் கோயில்' என்றே அழைக்கப்படுகிறது. பின்னர் இடைக்காலத்தில் சோழன் மற்றும் விஜயநகர ஆட்சிகாலத்தில் ஆட்சிப்பொறுப்புகளில் பின்னடைவு ஏற்பட்டது.
மைசூர் ஆட்சி காலத்தின் போது மீண்டும் குமாரமங்கலம் பகுதியில் வெங்கம்பூரில் இருந்து குடியேறிய தூரன் கூட்டத்தார் தங்கள் மதியூகத்தால் ஆட்சிப்பொறுப்பை கைப்பற்றினர். அதன் பின் கொங்கின் கிழக்குபகுதியும் கொங்கின் சரிபாதியான மழகொங்கம் (அன்றைய சேலம், நாமக்கல்) முழுதையுமே ஆட்சி செலுத்துமளவு அதிகாரம் மிக்கவர்களாக விளங்கினர்.
கொங்கதேசத்தின் மிக தொன்மையான காணிகளான காங்கயம், திருச்செங்கோடு, தூரன்பாடி, கொத்தனூர் போன்ற ஊர்களில் காணியுரிமை பெற்றதைக் கொண்டு தூரன் கூட்டத்தார் தொன்மையை யூகிக்கலாம்.
தூரன் கூட்டத்தின் ஆதி காணி தூரம்பாடியா, குமாரமங்கலமா என்பதில் மாற்றுக்கருத்து இருந்தாலும், அனைவருமே இரண்டு காணிகளின் முக்கியத்துவத்தை உணர்ந்துள்ளனர். தூரன்பாடியின் முதல் காணியாளர்கள் தூரன் கூட்டம். தூரர்கள் உருவாக்கிய ஊர்.
"ஆதி குமாரமங்கலம் அடுத்து சீராப்பள்ளி"
"ஆதி குமாரமங்கலம் அடுத்து மோழிப்பள்ளி நீதி வெங்கம்பூர் நிலைத்திருக்கும் தூரன் குலம்"
போன்றவை இன்றும் சொல்லப்படும் சொற்றொடர்கள்.
நிதான குணம் நன்றாக வாய்க்கப்பெற்ற தூரன் கூட்டம் ("சாந்த மிளிர் தூரர்") செல்லும் இடமெல்லாம் வேர்விட்டு வளர்ந்துவருகிறார்கள். குமாரமங்கலம் தூரன் கூட்டத்தினர் தேசிய அளவில் அசைக்க முடியாத அதிகார சக்தியாக சுமார் இருநூறு ஆண்டுகளாக உள்ளனர். குமாரமங்கலம் தூரன் கூட்டத்தில் ஐந்து கரைகள் பிரிவுகளாக இருப்பதாக கல்வெட்டு மூலம் அறிய முடிகிறது.
திருசெங்கோட்டு மலையில் ஏராளமான தர்ம காரியங்கள் நடத்தியுள்ளனர். மண்டப கட்டளைகள் உண்டு. ஒரு காலத்தில் திருப்பணி கல்வெட்டுகள் சில சக்திகளால் அழிக்கப்பட்டன. அதில் தூரன் கூட்ட கல்வெட்டுகளும் அடங்கும். திருசெங்கோட்டு மலை ராஜகோபுர பணி தூரன் கூட்ட நாகமலை கவுண்டர் மகன் சடையப்ப கவுண்டர் உபயத்தால் நடந்த கல்வெட்டு இன்றும் உள்ளது. அடிவாரத்தில் முற்காலத்தில் புகழோடு இருந்த தூரன் கூட்ட மண்டபம் இன்று இல்லை.
"கொங்கு எழுகரை நாடதிபன் பூந்துறை நாடன் கூறும் குமாரமங்கைத் தூரர் தன்குலன் செங்கோட்டாரைத் தினமும் சிந்தைசெயும் சடையன்"
என்று எழுகரை நாட்டிற்கே அதிபதி தூரன் கூட்ட சடையப்ப கவுண்டர் சிறப்பிக்கப்படுகிறார்.
தூரன் கூட்ட செட்டியா கவுண்டர் நிலத்தம்பிரான் கோயில் தாண்டவ குறடு, மலை விநாயகர் குறடு, நடராசர் குறடு, மலைப்படிகள் கொத்தியமை, சிவதீர்த்த நூறு படிகள், வயிரவ தீர்த்தத்துக்கு தென்மேற்கே இளைப்பாற்றி மண்டபம் போன்றவற்றையும், தினந்தோறும் திருச்செங்கோட்டில் அன்னதானமும் பெரிய அளவில் நடத்தியுள்ளர். செட்டியாகவுண்டர் தலைமையில் ஐந்துகரை தூரரும் குமாரமங்கலம் பொன்காளியம்மன் ஆலயத்தில் மண்டப திருப்பணிகள் செய்துள்ளனர்.
கீழ்க்கரை பூந்துறை நாட்டு சபை இருந்ததையும் அதில் 32 ஊராரும் கூடி முடிவெடுப்பதையும் குமாரமங்கலம் தூரன் கூட்டத்தார் பங்கேடுத்ததையும் நாட்டு கல்வெட்டு குறித்துள்ளது. நாட்டாட்சி அதிகாரம் பற்றிய முக்கிய தகவலாகும்.
வெங்கம்பூர் தூரன் கூட்டம் குமாரமங்கலத்தில் இருந்து அக்கரை வெங்கம்பூர் சென்று குடியமர்ந்தவர்கள். அங்கே பல்வேறு சிக்கல்களையும், ஆபத்துகளையும் அண்ணன்மார் சக்தியால் வென்று கடைசியில் அங்கே காணியாட்சி அதிகாரத்தையும் வாங்கினர். காரி கூட்டத்தார ஆதரவோடு மொடக்குறிச்சியில் குடியேறி காணியாட்சி கொண்டுள்ள மொடக்குறிச்சி தூரன் கூட்டத்தினர் இன்றும் தங்கள் ஆதி காணி குமாரமங்கலத்துக்கு சென்று வருகிறார்கள். மொடக்குறிச்சி தூரன் கூட்ட ஆவுடையா கவுண்டர் மேல்கரை பூந்துறை நாட்டு சபையில் பங்கெடுத்துள்ள நாட்டாராவார். மொடக்குறிச்சி தூரன் கூட்ட அத்தப்ப கவுண்டர் மன்றாடியார் என்ற பட்டம் தரித்து வழங்கப்படுகிறார். மேல்க்கரை பூந்துறை நாட்டில் வலுவான சக்தியாக இருந்தமைக்கு சிறந்த ஆதாரமாகும். நஞ்சை டையாறு ராசா கோயிலிலும், திருவாச்சியிலும் முதல் காணியாளர்கள் தூரன் கூட்டத்தினரே.
கலியாணி காணியின் காணியாளர் தூரன் கூட்ட நஞ்சைய கவுண்டர் சேர்ந்த தூரன் கூட்ட காணியூர்களை தொகுத்துக் கூறும் "கட்டி மகிபன் பள்ளு" நூலின் பகுதி